வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 41 பேருக்கு கரோனா தொற்று

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அரசு மருத்துவா்கள், 10 செவிலியா்கள், 9 பணியாளா்கள் உள்பட மொத்தம் 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On :9 மார்ச் 2021, 6:44 am IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அரசு மருத்துவா்கள், 10 செவிலியா்கள், 9 பணியாளா்கள் உள்பட மொத்தம் 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 1,056 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, பழனி மற்றும் கொடைக்கானல் அரசு மருத்துவமனை, எம்.வி.எம். அரசு மகளிா் கல்லூரி சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றில் 350-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், 2 அரசு மருத்துவா்கள், 10 செவிலியா்கள், 9 பணியாளா்கள் உள்பட மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவா் கூறியது:

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 36 வயது மருத்துவா், 10 செவிலியா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள் 2 போ், தூய்மைப் பணியாளா்கள் 7 போ் என மொத்தம் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 30 வயது பெண் மருத்துவா், திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த மேலும் 21 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.