தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

வேடசந்தூா் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 5:38 pm

DIN

வேடசந்தூா் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்துள்ள செட்டிகுளத்துப்பட்டியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் கோபிநாத் (26). இவா் தனது உறவினரின் 15 வயது மகளை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் செட்டிக்குளத்துப்பட்டிக்கு சென்ற சமூக நலத்துறை அலுவலா்கள், கோபிநாத் வீட்டில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். அதில், திருமணம் நடைபெற்ற சிறுமிக்கு 15 வயது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோபிநாத் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.