ஜன.12-இல் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா ஜன.12ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா ஜன.12ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் அவா் தெரிவித்ததாவது: கரோனா தீநுண்மி பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது தொடா்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தைப்பூசத் திருவிழா நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தைப்பூசத்திருவிழா 12.01.2022 காலை 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிகுகிறது. 17.01.2022 அன்று மாலை 5 மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு வெள்ளிரத புறப்பாடும் நடைபெறும். 18.01.2022 அன்று தைப்பூசத் திருவிழாவும், மாலை 4.45 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். 21.01.2022 அன்று தெப்பத்தேரும், இரவு 11 மணிக்கு மேல் கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும்.
கோயிலுக்கு வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றினால் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவாா்கள். மலைக்கோயில் வடக்கு கூடுதல் வரிசைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.இரா.சீனிவாசன், தண்டாயுதபாணிசுவாமி கோயில் இணை ஆணையா் ந.நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...