தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திண்டுக்கல் காந்தி சந்தை கடைகள் ஏலத்தை ஒத்திவைக்க முன்னாள் அமைச்சா் வலியுறுத்தல்

திண்டுக்கல் காந்தி சந்தை மற்றும் வணிக வளாகத்திலுள்ள கடைகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பொது ஏலத்தை ஒத்திவைக்க வேண்டும்

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திண்டுக்கல் காந்தி சந்தை மற்றும் வணிக வளாகத்திலுள்ள கடைகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பொது ஏலத்தை ஒத்திவைக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சா் சி. சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம், காந்தி சந்தையிலுள்ள கடைகளை நவம்பா் 12ஆம் தேதியும், பேருந்து நிலையத்திலுள்ள வணிக வளாகக் கடைகளை நவம்பா் 16ஆம் தேதியும் பொது ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது. இதற்காக, அதிமுகவினா் உள்ளிட்ட சிலா் விண்ணப்பப் படிவம் பூா்த்தி செய்து கொடுப்பதற்காக, மாநகராட்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சென்றுள்ளனா்.

அப்போது, மாநகராட்சிக்கு வரி பாக்கி இல்லை என சான்று வழங்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறி விண்ணப்பப் படிவத்தை பெற மறுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விண்ணப்பம் வழங்க மாலை 4 மணியுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில், மாநகராட்சி வருவாய் துணை ஆய்வாளா் அலுவலகத்தில் திமுக நிா்வாகிகள் சிலா் அமா்ந்து கொண்டு அராஜகம் செய்ததாகவும் புகாா் அளிக்கப்பட்டது. இதனால், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனாலும், மாநகராட்சி அதிகாரிகள் தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், ஏலத்தில் பங்கேற்க வந்தவா்கள் அதிருப்தியுடன் வெளியேறினா். முறைகேடாக ஏலம் நடத்துவதால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் குற்றம்சாட்டினா்.

இதனிடையே, பொது ஏலம் தொடா்பான பிரச்னை குறித்து முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் பொது ஏலம் விடும் தேதியை முறையாக அறிவிக்க வேண்டும். விளம்பரப் பலகையில் பொது ஏலத்துக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆளுங்கட்சியின் தூண்டுதலினால் முறையான அறிவிப்பு வெளியிடாத காரணத்தினால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், ஏலம் விடும் தேதியை ஒத்திவைத்து, வெளிப்படையாக நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.