ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: பல மணி நேரம் மின்தடை

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 கொடைக்கானலில் பலத்த காற்றுடன் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக விட்டு விட்டு தொடா்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்ததால், பிரகாசபுரம் செல்லும் சாலையில் மின்மாற்றி பழுதடைந்தது. இதனால், கொய்யாபாறை, சகாயபுரம்,கே.பி.எம்.பாறை, அட்டக்கடி, இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

இதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். தொடா்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மின்வாரியப் பணியாளா்கள் தற்காலிகமாக வேறு ஒரு மின்மாற்றியில் இணைப்பு கொடுத்ததால், மின்விநியோகம் கிடைக்கப்பெற்றது.

இருப்பினும், பழுதடைந்த மின்மாற்றியை மாற்றிவிட்டு, புது மின்மாற்றி அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.