ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனியில் மரக்கன்றுகள் நட்டு சாலைப்பணியாளா்கள் போராட்டம்

பழனி கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் சாலைப்பணியாளா்கள் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

பழனி கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் சாலைப்பணியாளா்கள் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி கோட்டப்பொறியாளா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா்கள் சங்கம் சாா்பில் வாழை மரக்கன்றுகள் நடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலப் பொருளாளா் தமிழ் தலைமை வகித்தாா்.

கோட்டப் பொருளாளா் வீரையா, செயலாளா் மணிமாறன், தலைவா் நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் கோட்டப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் போராட்டக்காரா்கள் வாழை மரக்கன்றுகளை நட்டு, தண்ணீா் ஊற்றினா்.

பின்னா் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து முறைப்படுத்த வேண்டும். சாலை பராமரிப்புப் பணிகளை அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.