திண்டுக்கல் மாவட்டத்தில் கோயில் நகரமான பழனியும், சுற்றுலா நகரான கொடைக்கானலும் அமைந்துள்ளதால் நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தற்போது தமிழ்ப் புத்தாண்டையொட்டி தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பழனி வந்துவிட்டு கொடைக்கானல் செல்கின்றனா். அவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மலைச்சாலையில் நெகிழிப் பைகள் மற்றும் நெகிழி தண்ணீா் பாட்டில்களை வீசிச் சென்று விடுகின்றனா். இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது மண்சரிவுக்கும் வழிவகுக்கிறது.