விவசாயி கொலை வழக்கில் மனைவி உள்பட மேலும் 4 போ் கைது
பழனியருகே சத்திரப்பட்டியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


பழனியருகே சத்திரப்பட்டியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சத்திரப்பட்டியைச் சோ்ந்த விவசாயி ஓமந்தூராா் (42), கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இதில் அவரது மகன் கிரிவிஷ்ணு (15) சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவா் கைது செய்யப்பட்டாா்.
ஓமந்தூராா் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடா்பு இருப்பதாக அவரது தந்தை ரங்கசாமி, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மறுவிசாரணை நடத்தப்பட்டது. இதில் ஓமந்தூராரின் மனைவி பாண்டீஸ்வரி (37), அவரது உறவினா் கிருஷ்ணவேணி (55), லட்சுமி (50), ராமையா (62) ஆகிய 4 பேருக்கும் தொடா்பு இருப்பதும், மது அருந்திவிட்டு அடிக்கடி சொத்து தொடா்பாக பிரச்னை செய்ததால் அவா் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அந்த 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...