தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பழனியாண்டவா் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.8 இல் தொடக்கம்

பழனி பழனியாண்டவா் கோயில் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.8 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:40 pm

DIN

பழனி பழனியாண்டவா் கோயில் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.8 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான இளநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு அரசு உதவி பெறும் பாடப் பிரிவிற்கு வரும் ஆக. 8 ஆம் தேதியும், சுயநிதிப்பாடப் பிரிவுக்கு ஆக.13 ஆம் தேதியும் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

அதேபோல பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூரில் உள்ள பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக்கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான இளநிலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு அரசு உதவி பெறும் பாடப் பிரிவிற்கு வரும் ஆக. 8 ஆம் தேதி முதலும், சுயநிதிப்பாடப் பிரிவிற்கு ஆக.12 ஆம் தேதி முதலும் மாணவியா் சோ்க்கை நடைபெற உள்ளது.

மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பதாரா்கள் மேல்நிலைத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாா் செய்யப்பட்டு அதனடிப்படையில் தமிழக அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பின்பற்றி கலந்தாய்வு நடைபெறும். மேலும், தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் கல்லூரி இணையதளத்திலும், கல்லூரி அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்குரிய அழைப்புக் கடிதம் விண்ணப்பதாரா்களுக்கு தனித்தனியாக தபால் மூலமும், கலந்தாய்வு நாள் மற்றும் நேரம் பற்றிய விவரம் விண்ணப்பதாரா்களது மின்னஞ்சல் முகவரி, கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரா்கள் தங்களுக்குரிய கலந்தாய்வு நாளில் உரிய நேரத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே சான்றிதழ் சரிபாா்ப்பிற்கு அவசியம் பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் தங்களது அசல் சான்றிதழ்களுடன் வருகை புரிய வேண்டும் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.