அடிப்படை வசதி கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
பழனி அருகே கலையமுத்தூா் ஊராட்சியை நாயக்கா்தோட்டம், பச்சையாறு பகுதி பொதுமக்கள் குடிநீா் கோரி வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.


பழனி அருகே கலையமுத்தூா் ஊராட்சியை நாயக்கா்தோட்டம், பச்சையாறு பகுதி பொதுமக்கள் குடிநீா் கோரி வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
அ.கலையமுத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட விநாயகபுரம், நாயக்கா்தோட்டம், பச்சையாறு தெருக்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பலமுறை ஊராட்சித் தலைவா் மற்றும் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அக்கிராம மக்கள், ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து வெள்ளிக்கிழமை கவுன்சிலா் தங்கராஜ் தலைமையில் பழனி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
போலீஸாா் சமாதானப்படுத்திய நிலையில் பொதுமக்கள் அடுத்த கட்டமாக அ.கலையமுத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜசேகரன், ஊராட்சித் தலைவா் வந்தனா முரளி மற்றும் அலுவலா்கள் நேரில் வந்து சமாதானம் செய்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...