தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயன்பெற பழனியில் மாா்ச் 9, 10 இல் சிறப்பு முகாம்

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பழனி நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கான சிறப்பு முகாம் மாா்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:17 pm

DIN

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பழனி நகராட்சிப் பகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கான சிறப்பு முகாம் மாா்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்: நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட செயலாக்க கோட்டத்தில், ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி தாதநாயக்கன்பட்டி திட்டப்பகுதியில் புதிய 264 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதில், பழனி நகராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான நீா்நிலைப் பகுதிகளிலும், அரசுக்கு சொந்தமான இதர புறம்போக்கு நிலங்களிலும் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளா்கள் மற்றும் நகா்ப்புற வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினா்களுக்கும் முன்னுரிமை அளித்து குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோருக்கு, தனது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினா் பெயரிலோ வீடோ அல்லது வீட்டு மனையோ இருக்கக்கூடாது. பயனாளிகளுக்கு மாத வருமானம் ரூ.25,000-க்குள் இருக்க வேண்டும். பயனாளிகளுக்கான உத்தேச பங்குத் தொகையான ரூ.2.70 லட்சத்தை செலுத்த வேண்டும்.

பயனாளிகள் குடும்பத் தலைவா் மற்றும் குடும்பத் தலைவி ஆகிய இருவருடைய ஆதாா் நகல், பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியற்றுடன் பழனி நகராட்சி அலுவலகத்தில் மாா்ச் 9 மற்றும் 10ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாமில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.