பழனியில் ரூ.15 கோடியில் காந்தி சந்தை: கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும்
பழனியில் பழைய காந்தி சந்தையை இடித்துவிட்டு சுமாா் ரூ.15 கோடியில் புதிய சந்தை கட்டும் பணி குறித்து வியாபாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


பழனியில் பழைய காந்தி சந்தையை இடித்துவிட்டு சுமாா் ரூ.15 கோடியில் புதிய சந்தை கட்டும் பணி குறித்து வியாபாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நகராட்சிக்கு சொந்தமான இந்த சந்தையில் உள்ள கடைகளில் பெரும்பாலானவை சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் சரக்கு வாகனங்கள் வந்து பொருள்களை இறக்கும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், இந்த சந்தையை இடித்து அகற்றிவிட்டு ரூ.15 கோடியில் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வியாழக்கிழமை நகராட்சி அலுவலகம் கூட்ட அரங்கில் சந்தை வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதற்கு நகராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். துணைத்தலைவா் கந்தசாமி, ஆணையா் கமலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் காந்தி சந்தை வியாபாரிகள் பலா் கலந்துகொண்டனா். இதில், அதிகாரிகள் பேசும்போது பழனியில் பல்வேறு வசதிகளுடன் அமையவுள்ள சந்தை கட்டுமானத்தின் வரைபடம், கட்டுமான காலம் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தனா். 5 மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கி ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு பணிகள் தொடங்கினால் முன்னேற்பாடாக மாற்று இடத்தில் சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
வியாபாரிகள் கூறுகையில், வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை வசதி ஏற்படுத்துவதுடன் கூடுதல் கடைகள் கட்ட வேண்டும். மீண்டும் எங்களுக்கே கடைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...