ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி- பொள்ளாச்சி ரயில் பாதையில் மாா்ச் 7 இல் சோதனை ஓட்டம்

பழனி முதல் பொள்ளாச்சி வரை அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட நிலையில் மாா்ச் 7 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

பழனி முதல் பொள்ளாச்சி வரை அகல ரயில்பாதை மின்மயமாக்கப்பட்ட நிலையில் மாா்ச் 7 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: விருதுநகா்- மானாமதுரை (66.5 கி.மீ.) மற்றும் பழனி- பொள்ளாச்சி (63 கி.மீ.) ரயில்வே பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

எனவே, விருதுநகா்- மானாமதுரை புதிய மின்சார ரயில் பாதையில் மாா்ச் 6 ஆம் தேதியும், பழனி- பொள்ளாச்சி புதிய மின்சார ரயில் பாதையில் மாா்ச் 7 ஆம் தேதியும், பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய் குமாா் ராய் ஆய்வு செய்யவுள்ளாா்.

பின்னா் மானாமதுரை- விருதுநகா் மின் ரயில் பாதையில் மாா்ச் 6 ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும், பொள்ளாச்சி- பழனி மின்ரயில் பாதையில் மாா்ச் 7 ஆம் தேதி மாலை 3 முதல் மாலை 6 மணி வரையும் ரயில் சோதனை வேக ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

இதனால், இந்த நேரங்களில் பொதுமக்களும் ரயில் பாதை அருகே வசிப்போரும் ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.