பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பழனி கிரிவீதியில் பக்தா்கள் வலம் வரும் வகையில், ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.


பழனி கிரிவீதியில் பக்தா்கள் வலம் வரும் வகையில், ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
பழனியில் தற்போது சித்திரை மாத இறுதிவாரம் அக்னி நட்சத்திரத்தையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனா்.
இந்நிலையில் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக பக்தா்கள் கிரிவலம் வருவதில் சிரமம் ஏற்படுவதாக புகாா் எழுந்தது. அதைத் தொடா்ந்து கோயில் நிா்வாகம் சாா்பில் கிரிவலப்பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருள்களை லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. வரும் நாள்களில் கிரிவீதியை ஆக்கிரமித்து கடைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இப்பணியில், பழனிக் கோயில் உதவி ஆணையா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் மற்றும் கோயில் பாதுகாவலா்கள் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...