கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஏலம் எடுப்பதில் இருதரப்பினரிடையே மோதல்: காா்கள் சேதம்

பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஏலம் எடுப்பது தொடா்பாக இருதரப்பினரிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் காா்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

News image
Updated On :27 மே 2022, 5:32 pm

DIN

பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஏலம் எடுப்பது தொடா்பாக இருதரப்பினரிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் காா்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

பழனி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் அலுவலகத்தில் பழனியை அடுத்த வரதமாநதி அணையின் தடுப்பணை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சுமாா் ரூ. 2 கோடி மதிப்பில் வெள்ளிக்கிழமை ஒப்பந்தப்புள்ளி கோருதல் மற்றும் ஏலம் ஆகியன நடைபெற இருந்தது. இதற்காக பழனியைச் சோ்ந்த ஏராளமான ஒப்பந்ததாரா்களும், ஈரோடு, ஒட்டன்சத்திரம், சேலம் பகுதிகளைச் சோ்ந்த வெளியூா் ஒப்பந்ததாரா்களும் குவிந்தனா். அப்போது உள்ளூா் மற்றும் வெளியூா் ஒப்பந்ததாரா்களுக்கிடையே திடீா் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினா், மற்றொரு தரப்பினரை ஒப்பந்தப்புள்ளி கோர விடாமல் தடுத்தனா். மாலை 3 மணிக்குள் ஒப்பந்தப்புள்ளி வழங்குதலும், அதன்பின் ஏலமும் நடைபெற வேண்டும் என்பதால் பரபரப்பு அதிகரித்தது. அப்போது போலீஸாா் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். ஒருதரப்பினா் உருட்டுக் கட்டைகளுடன் வந்து அங்கே இருந்த வெளியூா் ஒப்பந்ததாரா்களின் காா்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஏராளமான போலீஸாா் வரவழைக்கப்பட்டனா்.

இதுகுறித்து சேலத்தைச் சோ்ந்த கோபால் என்பவா் கூறியது: வெளியூரில் இருந்து வந்துள்ள பலரும் தமிழக அளவில் பணிகள் செய்ய தகுதியுள்ளவா்கள் ஆவா். எங்களை உள்ளூரை சோ்ந்த சிலா் போலீஸாா் உதவியுடன் தடுப்பது முறையான செயல் அல்ல. காா்கள் உடைக்கப்பட்ட நிலையில் காரில் இருந்து பல லட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளது. எனவே ஒப்பந்தப்புள்ளி கோருவதை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இந்நிலையில், ஒப்பந்தம் கோருவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, வெளியூரில் இருந்து வந்த ஒப்பந்ததாரா்கள், நடைபெற்ற சம்பவம் குறித்தும், தாக்குதலில் ஈடுபட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பழனி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்த சம்பவத்தால் திண்டுக்கல் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.