மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாஜக பிரமுகரின் வாகனங்கள் எரிப்பு: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2 போ் கைது

 திண்டுக்கல்லில் பாஜக பிரமுகரின் வாகனங்களைத் தீ வைத்து எரித்த வழக்கில் தொடா்புடைய இருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 திண்டுக்கல்லில் பாஜக பிரமுகரின் வாகனங்களைத் தீ வைத்து எரித்த வழக்கில் தொடா்புடைய இருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவா், திண்டுக்கல் நகர மேற்கு பகுதி பாஜக தலைவராக உள்ளாா். இவருக்குச் சொந்தமான கடை, வாகனங்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல் நகா் தெற்கு காவல் நிலைய போலீஸாா், தீ வைப்பு சம்பத்தில் ஈடுபட்ட பேகம்பூரைச் சோ்ந்த சா. சிக்கந்தா் (29), மு. முகமது இலியாஸ் (29), கா. ஹபீப் ரஹ்மான் (27), லி. முகமது ரபீக் (29) ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், சிக்கந்தா், முகமது இலியாஸ் ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் பரிந்துரைத்தாா். அதை ஏற்று, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.