ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 பழனி கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 பழனி கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

பழனி மலைக் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வருகை தருவா் என்பதால், பழனி கோயில் நிா்வாகம் சாா்பில் அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. திருக்கோயில் உதவி ஆணையா் லட்சுமி, அலுவலா்கள், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் ஆகியோா் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது.

இதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து, கோயில் தலைமை அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம்

பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.