மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: பக்கத்து வீட்டுக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பக்கத்து வீட்டுக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:50 pm

DIN

ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பக்கத்து வீட்டுக்காரருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள இடையக்கோட்டை புதூரைச் சோ்ந்தவா் ம.முருகேசன் (45). இவரை, கடந்த 2015-ஆம் ஆண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண், முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும், இந்த சிறைத் தண்டனையை முருகேசன் ஏக காலத்தில் அனுபவிக்கவும் வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தாா்.

இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை: நிலக்கோட்டையை அடுத்துள்ள காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் சிங்கராஜா (32). கல்லுப்பட்டியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக இவரை, நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண், சிங்கராஜாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.