மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயா்கல்வி அல்லது தொழில்நுட்ப படிப்புகள் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகை பெற நவ.11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:49 pm

DIN

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயா்கல்வி அல்லது தொழில்நுட்ப படிப்புகள் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகை பெற நவ.11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயா் கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவிகளுக்கு, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. கல்லூரியில் 2, 3, 4-ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை, தற்போது முதலாமாண்டு மாணவிகளுக்கும் வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வலைத்தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பா் 1 முதல் 11-ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவது குறித்து நவ.11-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. மாணவிகள் தங்களின் ஆதாா் எண் மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக - எமிஎஸ்.) மாற்றுச் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகள், முதற்கட்டத்தில் விண்ணப்பிக்கத் தவறியிருந்தாலும், தற்போது விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 92500 56810 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.