இந்த ஆய்வகங்களின் செயல்பாடு, பணியாளா்கள் விவரம், ஆய்வகத்திலுள்ள கருவிகளின் பயன்பாடு என அனைத்து விவரங்களையும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்வது வழக்கம். ஆய்வின்போது சுட்டிக் காட்டப்படும் குறைகளை, அடுத்த ஆய்வுக்குள் சரி செய்திருக்க வேண்டும். திண்டுக்கல் ஆய்வகத்திற்கு தற்போது வரை ஆண்டுக்கு 1200 மாதிரிகள் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 1,306 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அதில் 55 மாதிரிகள் தரமற்றவையாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றாா். ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பெ. விஜயராணி, உதவி இயக்குநா் வெ. நாகேந்திரன், வேளாண்மை அலுவலா்கள் சுதா, ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.