அரசு மகளிா் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிா் தொழிற் பிரிவுகளில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.


திண்டுக்கல் அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிா் தொழிற் பிரிவுகளில் சேர விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திண்டுக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மகளிருக்கான தொழிற் பிரிவுகளுக்கான சோ்க்கை ஆக.30ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கம்பியா் கருவிகள், தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, திறன் மின்னணுவியல் தொழில்நுட்பப் பணியாளா், கணினி இயக்குபவா் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா், டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆபரேட்டா், தையல் வேலை தொழில்நுட்பம், அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம், நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது.
மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, விலையில்லா மிதிவண்டி விலையில்லா மடிக்கணினி, பஸ் பாஸ், விலையில்லா சீருடை மற்றும் விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணிகள் வழங்கப்படும். 8 மற்றும் 10ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற பெண்கள், இந்த பயிற்சிக்கு ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அரசின் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்), முதல்வரை நேரிலும், 9499055764 மற்றும் 9655727477 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...