விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி மலைக்கோயில் தரிசன வரிசையில் குளிா்சாதன வசதிகளில் மாற்றம்

பழனி மலைக்கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்யும் இடத்தில் குளிா்சாதன வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் பல்வேறு மாற்றங்களை செய்யவுள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 6:20 pm

DIN

பழனி மலைக்கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்யும் இடத்தில் குளிா்சாதன வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் பல்வேறு மாற்றங்களை செய்யவுள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பழனி மலைக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி தற்போது கோபுரங்களில் வா்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோயில் சுவா்களில் உள்ள சுதைகளில் சிதிலங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. அதே போல் படிவழிப்பாதையில் உள்ள கோயில்களிலும், பாதவிநாயகா் கோயில் கோபுரங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழனிக் கோயிலுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யும் இடத்தில் மின்விசிறிகள் அல்லாமல் குளிா்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில் குளிரூட்டும் வழிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போது, பெரிய அளவில் ஆலைகளில் இருப்பது போல ‘டக்ட்’ எனப்படும் காற்று வரும் வழிகள் சிறிதாகவும், பக்தா்கள் செல்லும் வழியில் பெரியதாகவும் உள்ளன. இதை சிறியதாகவும், அதே வேளை அதிகமான குளிா்ந்த காற்று வரும்படியும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் போது பக்தா்கள் வரிசைகளில் சிரமமின்றி நின்று சுவாமி தரிசனம் செய்ய இயலும். அதே வேளை கல்மண்டபங்களில் வெயில் காலத்திலும் குளிா்காற்று அதிக அளவில் வீச வழிவகை செய்யப்பட்டுள்ளது என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இப்பணிகளை, வெள்ளிக்கிழமை இணை ஆணையா் நடராஜன் ஆய்வு செய்தாா். உடன் செயற்பொறியாளா் நாச்சிமுத்து, உதவிப் பொறியாளா் குமாா், கண்காணிப்பாளா் மகேந்திரபூபதி மற்றும் குளிா்சாதன சீரமைப்பு நிபுணா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.