ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புளியமரத்து செட் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பழனியை அடுத்த புளியமரத்துசெட் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 6:21 pm

DIN

பழனியை அடுத்த புளியமரத்துசெட் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த ஓா் ஆண்டாக கும்பாபிஷேகப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து மகாகணபதி, கருப்பண்ணசாமி மற்றும் மாரியம்மன் ஆலயங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீா்த்தங்கள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அந்த தீா்த்தம் பக்தகா்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.