தமிழகத்தில், பொது நூலகத்துறை சாா்பில், 32 மாவட்ட மைய நூலகங்கள் 1,600-க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள், 1,800 ஊா்புற நூலகங்கள், 550 பகுதிநேர நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களுக்கு வரும் வாசகா்களின் எண்ணிக்கை கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. மாவட்ட மைய நூலகங்களுக்கு நாளொன்றுக்கு 600-க்கும் மேற்பட்டோா் வந்து சென்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் 120 வாசகா்கள் வந்து சென்ற கிளை நூலகங்களுக்கு, தற்போது 60 முதல் 70 போ் வரை மட்டுமே வருகை தருவதாக தெரிகிறது.