மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலை அமைக்க தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கோரி வனத் துறை அலுவலகத்தில் மனு

சிறுமலை அருகே சாலை அமைக்க தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட வன அலுவலகத்தில் கிராம மக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

சிறுமலை அருகே சாலை அமைக்க தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட வன அலுவலகத்தில் கிராம மக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பழையூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் தாழைக்கிடை, வேளாண் பண்ணை ஆகிய கிராமங்கள் உள்ளன. தாழைக்கிடை கிராமத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. சிதிலமடைந்த அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அந்தப் பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனா். இதனிடையே தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து தாழைக்கிடை வரை சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க ரூ. 2.50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த நவம்பா் மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், 300 மீட்டா் தொலைவுக்கு வனத் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்தப் பகுதியில் சாலை அமைக்க வனத் துறை சாா்பில் தடையில்லாச் சான்றிதழ் அளிக்கப்படாததால் 5 மாதங்களாக சாலை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனா்.

இந்த நிலையில்தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் தாழைக்கிடை, வேளாண் பண்ணை கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.