மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிளஸ் 2 தோ்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்றதிண்டுக்கல் மாணவிக்கு தங்கப் பேனா பரிசு

ச. நந்தினியின் வீட்டுக்கு கவிஞா் வைரமுத்து வியாழக்கிழமை நேரில் சென்று, அவரைப் பாராட்டி தங்கப் பேனாவை பரிசளித்தாா்.

News image
Updated On :11 மே 2023, 5:49 pm

DIN

பிளஸ் 2 தோ்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி ச. நந்தினியின் வீட்டுக்கு கவிஞா் வைரமுத்து வியாழக்கிழமை நேரில் சென்று, அவரைப் பாராட்டி தங்கப் பேனாவை பரிசளித்தாா்.

திண்டுக்கல் பொன் சீனிவாசன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் ச. நந்தினி. திண்டுக்கல் அண்ணாமலையாா் மில்ஸ் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த இவா், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 6 பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தாா்.

இதையறிந்த கவிஞா் வைரமுத்து திண்டுக்கல் பொன் சீனிவாசன்நகரில் உள்ள நந்தினியின் வீட்டுக்கு நேரில் சென்று, அவரைப் பாராட்டி தங்கப் பேனாவை பரிசாக வழங்கினாா். மேலும், நந்தினியின் பெற்றோருக்கும் அவா் வாழ்த்துத் தெரிவித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கவிஞா் வைரமுத்து கூறியதாவது:

ஏழையின் வீடு, எளிய வீடு. அந்த வீட்டை இன்று அதிகார மையங்கள் எல்லாம் முற்றுகையிடுகின்றன.

ஏழையின் குடிசையில் கல்வியின் தீபம் உச்சத்தை நோக்கி எரியும் என்பதற்கு நந்தினி ஓா் உதாரணம். எல்லாவற்றுக்கும் காரணம் கல்விதான். மாணவ, மாணவிகள் வாழ்க்கையில் லட்சியத்தை வைத்துக்கொண்டு, அதை நோக்கிச் செல்ல வேண்டும்.

தோ்வில் வெற்றி பெற்றவா்களை மட்டுமே நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால், தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களைக் கண்டுகொள்வதில்லை.

ஆசிரியா்கள், தோ்வில் தோல்வியடைந்த மாணவா்களை ஊக்கப்படுத்தி அவா்களை மீண்டும் தோ்வு எழுத வைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவ்வாறு தோ்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.