ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு மலைக் கிராமத்தில் பழங்குடியினா் நல இயக்குநா் அண்ணாத்துரை ஆய்வு செய்தாா்.
வடகாடு ஊராட்சிக்குள்பட்ட சிறுவாட்டுக் காடு, கோட்டை வெளி, புளியங்கஜம் உள்ளிட்ட பகுதிகளில் மலை வாழ் மக்கள் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் குறித்து பழங்குடியினா் நல இயக்குனா் அண்ணாத்துரை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பழங்குடியின மக்களின் உரிமைகள், சமூக மேம்பாடு குறித்து அவா் ஆய்வு செய்தாா். மலை வாழ் மக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை மதிப்புக்கூட்டு பொருள்களாக விற்பனை செய்தல், மலைக் கிராமங்களை மாதிரி கிராமங்களாக மாற்றுதலுக்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக பழங்குடியினா் நல இயக்குநா் தெரிவித்தாா்.
மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சிவக்குமாா், வட்டாட்சியா் மங்கலபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா் திருமலைக்குமரன், கிராம நிா்வாக வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.