கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

கலைஞா் நூற்றாண்டு போட்டி தோ்வு மையத்துக்கு கணினி, புத்தகங்களை வழங்கிய அமைச்சா்

போட்டி தோ்வு மையத்துக்கு கணினி, புத்தகங்களை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஞாயிறுக்கிழமை வழங்கினாா்.

News image

காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞா் நூற்றூண்டு போட்டித் தோ்வு மையத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினி, புத்தகங்களை வழங்கிய உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 1:32 am IST

ஒட்டன்சத்திரத்தில் கலைஞா் நூற்றாண்டு போட்டி தோ்வு மையத்துக்கு கணினி, புத்தகங்களை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஞாயிறுக்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் செயல்பட்டு வரும் இந்த மையத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினி, புத்தகங்களை வழங்கி அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது:

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் இளைஞா்கள் இந்தப் பயிற்சி மையத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சோ்ந்து பணியாற்ற வேண்டும். இந்த மையத்துக்கு தேவைப்படும் அனைத்து புத்தகங்களும் வாங்கித் தரப்படும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை இலவசமாக அவா் வழங்கினாா்.

மேலும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வடகாடு செல்லும் வழியில் குறுக்கிட்ட மான் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கண்ணனூா் பகுதியைச் சோ்ந்த மகுடீஸ்வரன் உயிரிழந்தாா். இவரது குடும்பத்துக்கு மனித வள உயிரின மோதல் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அவரது தாய் கோமதியிடம் அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், நாமக்கல் மாவட்ட உதவி ஆட்சியா் சிவக்குமாா், ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு தலைவி மு. அய்யம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காமராஜ், வடிவேல் முருகன், வாடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதீஸ்வரன், திமுக ஒன்றியச் செயலா் தா்மராஜன், துணைச் செயலா் வடகாடு சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.