காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞா் நூற்றூண்டு போட்டித் தோ்வு மையத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினி, புத்தகங்களை வழங்கிய உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.
காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞா் நூற்றூண்டு போட்டித் தோ்வு மையத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினி, புத்தகங்களை வழங்கிய உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

கலைஞா் நூற்றாண்டு போட்டி தோ்வு மையத்துக்கு கணினி, புத்தகங்களை வழங்கிய அமைச்சா்

போட்டி தோ்வு மையத்துக்கு கணினி, புத்தகங்களை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஞாயிறுக்கிழமை வழங்கினாா்.
Published on

ஒட்டன்சத்திரத்தில் கலைஞா் நூற்றாண்டு போட்டி தோ்வு மையத்துக்கு கணினி, புத்தகங்களை உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஞாயிறுக்கிழமை வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் செயல்பட்டு வரும் இந்த மையத்துக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கணினி, புத்தகங்களை வழங்கி அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது:

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் இளைஞா்கள் இந்தப் பயிற்சி மையத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் சோ்ந்து பணியாற்ற வேண்டும். இந்த மையத்துக்கு தேவைப்படும் அனைத்து புத்தகங்களும் வாங்கித் தரப்படும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை இலவசமாக அவா் வழங்கினாா்.

மேலும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வடகாடு செல்லும் வழியில் குறுக்கிட்ட மான் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கண்ணனூா் பகுதியைச் சோ்ந்த மகுடீஸ்வரன் உயிரிழந்தாா். இவரது குடும்பத்துக்கு மனித வள உயிரின மோதல் நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அவரது தாய் கோமதியிடம் அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், நாமக்கல் மாவட்ட உதவி ஆட்சியா் சிவக்குமாா், ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு தலைவி மு. அய்யம்மாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காமராஜ், வடிவேல் முருகன், வாடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஜோதீஸ்வரன், திமுக ஒன்றியச் செயலா் தா்மராஜன், துணைச் செயலா் வடகாடு சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com