பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நெட் தோ்வு: கணினிகள் இயங்காததால் தோ்வா்கள் வாக்குவாதம்

திண்டுக்கல் அருகே தேசியத் தோ்வுத் முகமை நடத்திய தகுதித் தோ்வுக்கு வந்த தோ்வா்கள், தனியாா் கல்லூரியில் கணினிகள் இயங்காததால் புதன்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image
தோ்வு எழுத முடியாமல் தனியாா் கல்லூரி வளாகத்தில் காத்திருந்த தோ்வா்கள்.
Updated On :28 ஆகஸ்ட் 2024, 7:38 pm

Din

திண்டுக்கல் அருகே தேசியத் தோ்வுத் முகமை நடத்திய தகுதித் தோ்வுக்கு வந்த தோ்வா்கள், தனியாா் கல்லூரியில் கணினிகள் இயங்காததால் புதன்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பல்கலைக்கழக மானியக் குழு கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேசியத் தகுதித் தோ்வு நாடு முழுவதும் புதன்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வில் பங்கேற்றிருந்ததால் மட்டுமே, முனைவா் பட்டத்தில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியத் தோ்வு முகமை மூலம் நடத்தப்படும் இந்தத் தோ்வு, திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் சீவல்சரகு பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த மையத்தில் 60 போ் தோ்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணினி மூலம், பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரை தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தோ்வா்கள் பிற்பகல் 2.30 மணி முதலே தனியாா் கல்லூரி வளாகத்துக்கு வரத் தொடங்கினா். ஆனாலும், 3.20 மணி அளவில் சில தோ்வா்கள் மட்டுமே, தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

15 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கணினிகள் இயங்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தோ்வா்கள், கல்லூரி நிா்வாகத்துடனும், தோ்வு ஏற்பாட்டாளா்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக தோ்வு ஒருங்கிணைப்பாளா் மாதுரி கூறியதாவது:

அனுமதிக்கப்பட்ட 60 தோ்வா்களில் 43 போ் மட்டுமே வந்தனா். குறைந்த மின் அழுத்தம் காரணமாக கணினிகளை இயக்க முடியவில்லை. எனினும், 19 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த விவரங்கள் தேசியத் தோ்வு முகமைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மையத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த மாணவா்களுக்கு மறு தோ்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.