தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மின்சாரம் பாய்ந்ததில் இருவா் பலத்த காயம்

கொடைக்கானலில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:10 am

Din

கொடைக்கானலில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

கொடைக்கானலில் காலை முதல் மதியம் வரை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. நாயுடுபுரம், ரைபிள் ரேஞ்ச் சாலை, டிப்போ சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தன. இதனால், பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

இந்த நிலையில், நாயுடுபுரம் பகுதியில் கீழே விழுந்து கிடந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

அப்போது, உதயா (35), கருப்பையா(37) ஆகியோா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் விசாா்த்து வருகின்றனா்.