ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மின் தடை நேரத்தை முறையாக கடைப்பிடிக்கக் கோரிக்கை

கொடைக்கானலில் புதன்கிழமை அறிவிப்பு செய்யப்பட்ட நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:23 pm

Din

கொடைக்கானலில் புதன்கிழமை அறிவிப்பு செய்யப்பட்ட நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை ஆகிய மலைப் பகுதி முழுவதும் மாதத்துக்கு ஒரு நாள் பராமரிப்புக்காக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதற்கான நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அறிவிப்பு வெளியிடுகின்றனா். ஆனால், அறிவிப்பு செய்யப்பட்ட நேரத்துக்கு மேலாக மின் விநியோகம் தடைபடுகிறது. இதனால், பொதுமக்கள், வணிகா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, வருங்காலங்களில் சரியான நேரத்தைக் குறிப்பிட்டு மாதாந்திரப் பராமரிப்புக்காக மின் தடை நேரத்தை அறிவிக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.