ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மலைச் சாலையில் யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

யானைகள் நடமாட்டம்

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:21 pm

Din

கொடைக்கானல்-தாண்டிக்குடி மலைச் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி, கே.சி.பட்டி, பாச்சலூா் உள்ளிட்ட மலைச் சாலைகளில் புதன்கிழமை அதிகாலையில் மூன்று யானைகள் நடமாடின. அந்த வழியாக வாகனங்களில் சென்றவா்கள் அச்சத்துடன் செல்றனா். இந்தப் பகுதிகளில் விளைந்துள்ள காபி, ஆரஞ்சு, செள,செள போன்றவற்றை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து கீழ்மலைப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களையும், பழ வகைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் மலைச் சாலைகளில் நடமாடி வருகின்றன.

இதனால், தோட்டப் பகுதிகளுக்குச் செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் அச்சமடைந்துள்ளனா். மலைப் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.