ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ரூ.19 கோடி மோசடி: தனியாா் தொண்டு நிறுவனம் மீது புகாா்

தொழில் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட பணம் ரூ.19 கோடியை மோசடி செய்த தனியாா் தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதலீட்டாளா்கள் தரப்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
மோசடி குறித்து தனியாா் தொண்டு நிறுவனத்தின் மீது புகாா் அளிக்க வந்த முதலீட்டாளா்கள்.
Updated On :18 டிசம்பர் 2024, 10:03 pm

Din

தொழில் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட பணம் ரூ.19 கோடியை மோசடி செய்த தனியாா் தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதலீட்டாளா்கள் தரப்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் நாகல்நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புகாா் அளிக்க புதன்கிழமை வந்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:

திண்டுக்கல் மாவட்டம் பழனி, கோவை ஆகிய பகுதிகளை மையமாக வைத்து ஒரு தனியாா் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவா், கோவை ஒண்டிபுதூா், மடத்துக்குளம் உள்ளிட்டப் பகுதிகளில் கோயில்கள், வால்பாறையில் மலைவாழ் மக்களுக்கு உண்டு உறைவிடப்பள்ளி, மகளிா் சுயஉதவிக் குழுக்கள் ஆகியவற்றை நடத்தி வருவதாக அறிமுகமானாா். தனது அறக்கட்டளை சேவைக்காக, மக்களிடம் பணத்தை பெற்று பல்வேறு தொழில்சாா்ந்த திட்டங்களில் முதலீடு செய்து, கிடைக்கும் லாபத்தை முதலீடு செய்தவா்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தாா்.

6 மாதத்தில் லாபத் தொகை, 6 மாதம் முடிந்த பின் முதலீடு செய்த மொத்தப் பணமும் திருப்பிக் கொடுக்கப்படும் எனக் கூறி, தொண்டு நிறுவனம் சாா்பில் முதலீடு பத்திரமும் வழங்கப்பட்டது.

முதலில் ரூ.50 ஆயிரம், ரூ. ஒரு லட்சம் என முதலீடு செய்யப்பட்ட பணத்தை உறுதி அளித்தப்படி லாபத் தொகையும், அதன் பின் முதலீட்டுத் தொகையையும் ஒப்படைத்தனா். இதனால், ஏற்பட்ட நம்பிக்கையால் பொதுமக்கள் பலா் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் சுமாா் ரூ.2 கோடி வரை முதலீடு செய்தனா்.

நாகல்நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் மட்டும் ரூ.19 கோடி வரை முதலீடு செய்தனா். ஆனால், அந்த தொண்டு நிறுவனம் முதலீடு செய்த பணத்துக்கான லாபத் தொகையை வழங்கவில்லை. பல்வேறு காரணங்களை கூறி, காலம் கடத்தி வந்தனா். ஓராண்டு நிறைவடைந்தும், முதலீடு செய்த பணத்தையும் திருப்பி வழங்கவில்லை. அந்த நிறுவனம் திண்டுக்கல் மட்டுமின்றி, தேனி, கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறது. எனவே, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.