ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வீடு தீப்பிடித்து எரிந்ததில் பணம், நகை சாம்பலாயின

தீ விபத்தால் வீட்டை இழந்த நாச்சிமுத்துக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:07 pm

Din

செம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில், பணம், நகை தீயில் எரிந்து சாம்பலாயின. 

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (68). இவரது மனைவி பாப்பாத்தி (61). இந்த வயதான தம்பதியினா் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இவா்கள் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரொக்கப் பணம் ரூ.50 ஆயிரம், 4 பவுன் நகை எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து, தகவலறிந்த வந்த ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன், அக்கரைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி சக்திவேல், வருவாய்த் துறையினா் ஆகியோா் வயதான தம்பதியினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

மேலும், தீ விபத்து குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.