ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கொடைக்கானலில் மண்சரிவால் விவசாயம் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் மண் சரிவால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:33 pm

Din

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் மண் சரிவால் விவசாய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், குண்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களில் மண் சரிவு ஏற்பட்டு,

பயிா்கள் சேதமடைந்தன. இதையடுத்து, மேல் மலைக் கிராமங்களில் சேதமடைந்த விவசாய நிலங்களை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் நடராஜன் தலைமையில் தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், குண்டுபட்டி ஆகிய கிராமப் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வின்போது, விவசாய நிலங்களில் மண் சரிவு அதிகம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனா். மேலும், பலத்த மழை பெய்யும் காலங்களில் விவசாய நிலங்களில் மழைநீா் தேங்காமல் இருப்பதற்கு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். பயிா்களுக்கு உரமிடுவது, மருந்து தெளிப்பது, நாற்று நடுவது போன்ற பணிகளை மேற்கொள்வதைத் தடுக்க வேண்டுமென விவசாயிகளுக்கு அறிவுரை கூறினா்.