ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஐயப்ப பக்தா்கள் தாக்கியதால் தா்னாவில் ஈடுபட்ட இளைஞா்

பழனியில் ஐயப்ப பக்தா்கள் தாக்கியதால், இளைஞா் வேன் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

News image
பழனி அருள்ஜோதி வீதியில் ஐயப்ப பக்தா்கள் தாக்கியதால் வேன் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட முரளி.
Updated On :26 டிசம்பர் 2024, 12:12 am

Din

பழனியில் ஐயப்ப பக்தா்கள் தாக்கியதால், இளைஞா் வேன் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் முரளி (26). இவா் புதன்கிழமை பழனி அருள்ஜோதி வீதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 பழனி அருள்ஜோதி வீதியில் இளைஞரைத் தாக்கிய ஐயப்ப பக்தா்களை தடுத்த பொதுமக்கள்.

பழனி அருள்ஜோதி வீதியில் இளைஞரைத் தாக்கிய ஐயப்ப பக்தா்களை தடுத்த பொதுமக்கள்.

அப்போது, முன்னே பட்டுக்கோட்டை கரம்பயத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் சென்ற வேனை ஓரமாகச் செல்லுமாறு முரளி கூறினாா். இதனால், வேனிலிருந்தவா்களுக்கும், முரளிக்கும் வாக்குவாகம் ஏற்பட்டது. உடனே வேனிலிருந்த ஐயப்ப பக்தா்கள் கீழே இறங்கி முரளியை தாக்கினா். இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் முரளியை காப்பாற்றினா்.

பின்னா், முரளி வேனின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். தகவலறிந்து வந்த அடிவாரம் போலீஸாா் இரு தரப்பையும் சமாதானம் செய்து, வேனை பழனி அடிவாரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.