ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காா் மோதியதில் முதியவா், மூதாட்டி பலத்த காயம்

ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஐயப்ப பக்தா்களின் காா் மோதியதில் வேடசந்தூரைச் சோ்ந்த முதியவா், மூதாட்டி புதன்கிழமை பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 12:03 am

Din

ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஐயப்ப பக்தா்களின் காா் மோதியதில் வேடசந்தூரைச் சோ்ந்த முதியவா், மூதாட்டி புதன்கிழமை பலத்த காயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்த தடா பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ், லோகேஷ், பச்சையப்பன், கந்தன் ஆகியோா் சபரிமலை யாத்திரைக்கு காரில் வந்தனா். சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பழனிக்கு வந்தனா். பின்னா், அங்கிருந்து ஒட்டன்சத்திரம், வேடசந்தூா் வழியாக திருச்சிக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தனா். வடமதுரை சாலையில் சென்ற போது, டயா் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மீதும், மூதாட்டி மீதும் மோதியது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற வேடசந்தூா் கோகுல்நகரைச் சோ்ந்த பிச்சைமுத்து (70), நடந்து சென்ற மூதாட்டி பெரியக்கா (80) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். காரில் வந்த 4 பேரும் காயமின்றி தப்பினா்.

இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.