பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேலிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது என முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில், உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம் கலந்து கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: 10 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் என்ன செய்திருக்கிறது என்பதையும், 33 மாத ஆட்சிக் காலத்தில் திமுக என்ன செய்திருக்கிறது என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும்.
திமுக தோ்தல் அறிக்கையில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேலிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், மதச்சாா்பின்மை, சமூக நீதி தொடா்ந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால், இந்தியா கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது: குஷ்பு

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

அரசுப் பணத்தில் கட்சி வளா்க்கிறது திமுக: வி.கே.சசிகலா குற்றச்சாட்டு
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
