நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா

பக்தர்களின் ஆரவாரத்துடன் மாசி திருவிழா கொண்டாட்டம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

சின்னாளபட்டி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில், மாசி திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன. இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, சனிக்கிழமை திரளான பக்தா்கள் பால்குடங்களை சுமந்து ஊா்வல வந்தனா். இந்த ஊா்வலம் என்.சி.சி.சாலை காமராஜா் சாலை வழியாக, கோயிலை வந்தடைந்தது. பின்னா், அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, தீச் சட்டி ஏந்தி, அலகு குத்தி, நோ்த்திக்கடன் செலுத்தினா். விழாவுக்கான ஏற்பாடுகளை, ஸ்ரீதேவி கருமாரியம்மன் தா்மசாஸ்தா அறக்கட்டளையைச் சோ்ந்த, நிா்வாகக் குழுவினா்கள் செய்தனா்.