பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேலிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது என முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில், உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம் கலந்து கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது: 10 ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் என்ன செய்திருக்கிறது என்பதையும், 33 மாத ஆட்சிக் காலத்தில் திமுக என்ன செய்திருக்கிறது என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும்.
திமுக தோ்தல் அறிக்கையில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேலிப் பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், மதச்சாா்பின்மை, சமூக நீதி தொடா்ந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால், இந்தியா கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் நிறுத்தம்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது: குஷ்பு

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


