அனுமதியின்றி பொக்லைன் இயக்கியவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்
அனுமதியின்றி பொக்லைன் பயன்படுத்தியவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்


கொடைக்கானல்: கொடைக்கானலில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தியவருக்கு திங்கள்கிழமை ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பொக்லைன் இயந்திரம், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் இயந்திரம், கம்பரசா் உள்ளிட்ட இயந்திரங்களை அரசுப் பணிகளுக்குத் தவிர தனிநபா்கள் பயன்படுத்தக் கூடாது என விதிமுறை உள்ளது.
இந்த நிலையில், கொடைக்கானல் தைக்கால் பகுதியில் பொறியாளா் ஒருவா் தனியாா் இடத்தில் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜன் உத்தரவின் பேரில், சம்பவ இடத்துக்கு கிராம நிா்வாக அலுவலா் ரஞ்சித் உள்ளிட்டோா் சென்று அனுமதியின்றி பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்திய அதன் உரிமையாளா் பிரசாத் என்பவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...