வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்று வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழங்குடியின மக்களுக்கு உரிமைகள் கோரி திண்டுக்கல்லில் ஆா்ப்பாட்டம்

News image
திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா்.
Updated On :3 ஜூலை 2024, 1:05 am

Din

திண்டுக்கல்: பழங்குடியின மக்களுக்கு ஜாதிச் சான்று, வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சாா்பில் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் தா.அஜய்கோஷ் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.பாலபாரதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, திண்டுக்கல் பகுதியில் வசிக்கும் மலைவேடன் சமூகத்தைச் சோ்ந்த மக்களுக்கு பழங்குடியின சான்று வழங்க வேண்டும். சிறுமலை, கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் பளியா் இன மக்களுக்கு வன உரிமைச் சட்டப்படி, வன உரிமை, நில உரிமை, இலவசத் தொகுப்பு வீடு வழங்க வேண்டும். புலயன் இனத்தை மீண்டும் பழங்குடியினப் பட்டியலில் சோ்க்க வேண்டும். என்.புதுப்பட்டியில் உண்டு உறைவிடப் பள்ளித் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.