தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகரிப்பு

பழனி மலைக்கோயிலில் காா்த்திகை திருநாளில் பக்தா்கள் கூட்டம் அதிகரிப்பு

News image
Updated On :3 ஜூலை 2024, 12:33 am

Din

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழனி மலைக்கோயிலுக்கு செல்லும் வின்ச், ரோப்காா் போன்ற இடங்களில் டிக்கெட் பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

மலைக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் மூன்று மணி நேரமானது. மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சாயரட்சை முடிந்த பின்னா், சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகார உலா எழுந்தருளினாா். தொடா்ந்து, வெள்ளி சப்பரத்தில் தங்கத்தோ் நிறுத்தத்துக்கு வந்து தங்கத்தேரில் ஏற்றம் செய்யப்பட்டு வெளிப் பிரகாரம் உலா எழுந்தருளினாா்.

பக்தா்களுக்கு தேவையான குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாகம் சாா்பில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேசன், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் செய்னா்.