தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பளியா் இன மக்களின் 2,475 கோரிக்கைகள் நிறைவேற்றம்: ஆட்சியா்

திண்டுக்கல் மாவட்டத்தில் பளியா் இன மக்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட 5,401 மனுக்களில் 2,475 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 1:30 am

Din

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பளியா் இன மக்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட 5,401 மனுக்களில் 2,475 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், கொடைக்கானல் உள்பட 6 வட்டங்களில் 54 கிராமங்களில் பளியா் இன மக்கள் 1,320 குடும்பங்களில் வசிக்கின்றனா்.

அரசின் நலத் திட்டங்கள் பளியா் இன மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், துணை ஆட்சியா் தலைமையில் குழுக்கள் நியமிக்கப்பட்டு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம்களில் ஜாதித் சான்றிதழ், குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை, வங்கிக் கடனுதவி என பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 5,401 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், 2,475 பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. 2007 பேரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, விரைவில் அதற்கான ஆணைகள் வழங்கப்படும். எஞ்சிய 857 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன என்றாா்.