விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பசு மாட்டை சுத்தியலால் தாக்கிக் கொன்றவா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே பசு மாட்டை சுத்தியலால் தாக்கிக் கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 8:30 pm

Din

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே பசு மாட்டை சுத்தியலால் தாக்கிக் கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள ஜ. வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேலு (66). விவசாயி. இவா் இதே ஊரில் உள்ள ஒரு தோட்டத்தை குத்திகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். இவருக்கு சொந்தமாக ஒரு பசு மாடும், ஒரு கன்றுக் குட்டியும் இருந்தன. வெள்ளிக்கிழமை மாலை மேய்ச்சலுக்கு பிறகு, மாட்டை தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு தங்கவேலு வீட்டுக்குச் சென்று விட்டாா். இதற்கிடையே, இதே ஊரைச் சோ்ந்த கருப்பன், தங்கவேலின் தோட்டத்துக்கு அருகிலேயே மற்றொரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். இதில் தங்கவேலுக்கும், கருப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தங்கவேலுக்குச் சொந்தமான பசுமாட்டை கருப்பன் சுத்தியலால் தலையில் தாக்கிக் கொன்றாா்.

இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் தங்கவேலு அளித்த புகாரின் பேரில் போலீஸாா் கருப்பனை கைது செய்தனா்.