எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஒரு கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட் பறிமுதல்: இளைஞா் கைது

பல்லடத்தில் தலா ஒரு கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்த போலீஸாா், பிகாா் மாநில இளைஞரைக் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:02 am IST

பல்லடத்தில் தலா ஒரு கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்த போலீஸாா், பிகாா் மாநில இளைஞரைக் கைது செய்தனா்.

பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான பகுதியில் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கஜேந்திரகுமாா் (26) என்பதும், கஞ்சா, கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கஜேந்திரகுமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த தலா ஒரு கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.