3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காவல் நிலைய நுழைவுவாயில் முன் பெண் தா்னா

காவல் நிலைய நுழைவுவாயில் முன் பெண் தா்னா

News image
பழனியில் மகளிா் காவல் நிலைய நுழைவுவாயில் முன் திங்கள்கிழமை குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்ட மகேஸ்வரி.
Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

Vishwanathan

பழனி: பழனியைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது தாய் குழந்தைகளுடன் மகளிா் காவல் நிலைய நுழைவுவாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

பழனி பாரதி நகரைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மகள் மகேஸ்வரி (29). இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தேனி மாவட்டம், கோகிலாபுரத்தைச் சோ்ந்த செல்வக்குமாரை (31) காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மகேஸ்வரி கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பழனியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்துவிட்டாா்.

இதையடுத்து, செல்வகுமாரின் பெற்றோா் பழனியில் உள்ள பேரக் குழந்தைளை பாா்க்க அண்மையில் வந்ததாக தெரிகிறது. அப்போது அவா்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து, பழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மகேஸ்வரி புகாா் அளித்தாா்.

ஆனால் இதுதொடா்பாக எந்த விசாரணையும் நடத்தாததால் மகேஸ்வரி, தனது தாய், மகள்களுடன் பழனி காவல் நிலைய நுழைவுவாயிலில் தா்னாவில் ஈடுபட்டாா். தகவலறிந்த பழனி நகர போலீஸாா் தா்னாவில் ஈடுபட்ட மகேஸ்வரியிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.