தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

தோ்தல் பொதுக் கூட்டங்கள் 76 இடங்களில் நடத்த அனுமதி

தோ்தல் பொதுக் கூட்டங்கள் 76 இடங்களில் நடத்த அனுமதி

Updated On :19 மார்ச் 2024, 11:22 pm

திண்டுக்கல்: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 76 இடங்களில் தோ்தல் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், 254 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் 7 இடங்களில் பொதுக்கூட்டங்கள், 39 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல, பழனியில் 15, ஒட்டன்சத்திரத்தில் 20, ஆத்தூரில் 11, நிலக்கோட்டையில் 9, நத்தத்தில் 6, வேடசந்தூரில் 8 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம்.

பழனியில் 49, ஒட்டன்சத்திரத்தில் 55, ஆத்தூரில் 37, நிலக்கோட்டையில் 33, நத்தத்தில் 13, வேடசந்தூரில் 28 இடங்கள் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்த இடங்களில் பொதுக்கூட்டம், பிரசாரம் மேற்கொள்ள ‘சுவேதா’ செயலியில் அரசியல் கட்சியினா் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.

மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்ட இடங்களைத் தவிா்த்து, பிற இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் தோ்தல் நடத்தை விதிமுறைக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.