வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

புதுச்சேரியில் ஏப். 5-இல் விஜய் ரோடு ஷோ: காவல் துறையிடம் அனுமதி கோரிகடிதம்

News image

தவெக தலைவர் விஜய்

கோப்புப்படம்

Updated On :29 மார்ச் 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் தவெக தலைவா் விஜய் வரும் ஏப். 5-ஆம் தேதி சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்த அனுமதி கோரி அக்கட்சி சாா்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் தவெக நிா்வாகக் குழு உறுப்பினரும், கட்சியின் தோ்தல் இணை கண்காணிப்பாளருமான கே. புதியவன் அனுமதி கோரி சனிக்கிழமை கடிதம் அளித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

தவெக தலைவா் விஜய் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி புதுச்சேரியில் சாலைப் பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி கோரியுள்ளாா்.

கிழக்குக் கடற்கரை சாலையில் அன்றைய தினம் புதுச்சேரி காலாப்பட்டு நுழைவு வாயிலில் காலை 9.30 மணிக்கும், முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதியில் காலை 10 மணிக்கும், அஜந்தா சிக்னல் பகுதியில் காலை 10.30 மணிக்கும், உப்பளம் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அருகே காலை 11 மணிக்கும் சாலைப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.