இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

மண் ஏற்றி வந்த லாரிகளை மடக்கிய பாஜகவினா்

மண் ஏற்றி வந்த லாரிகளை மடக்கிய பாஜகவினா்

Updated On :22 மார்ச் 2024, 5:59 pm

பழனி, மாா்ச் 22: பழனி அருகே மண் ஏற்றி வந்த லாரிகளை பாஜகவினா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனியை அடுத்த சத்திரப்பட்டி பகுதிகளில் இருந்து வெள்ளிக்கிழமை மண் ஏற்றி வந்த லாரிகளை பழனி புறவழிச்சாலையில் பாஜக மாவட்டச் செயலா் மகுடீஸ்வரன் உள்ளிட்ட அந்தக் கட்சியினா் தடுத்து நிறுத்தினா். இந்த லாரிகளில் ஆயக்குடி பகுதிகளில் மண் அள்ள ரசீது வழங்கப்பட்டுள்ள நிலையில், சத்திரப்பட்டியில் இருந்து மண் ஏற்றி வர வருவாய்த்துறையினரும், போலீஸாரும் எப்படி அனுமதி வழங்கினா் எனக் கூறி வாகனங்களை நிறுத்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரமாக போலீஸாரோ, வருவாய்த்துறையினரோ அங்கு வராததால் அந்தப் பகுதி மக்கள் சமரசம் செய்ததையடுத்து பாஜகவினா் கலைந்து சென்றனா்.